உயிரிழந்த தலைமைக் காவலர் மகராஜனின் திருவுருவ படத்திற்கு சென்னை பெருநகர காவல் ஆணையாளர் மற்றும் காவல் அதிகாரிகள் மலர் தூவி மௌன அஞ்சலி

Loading

சென்னை பெருநகர காவல், K-4 அண்ணாநகர் போக்குவரத்து புலனாய்வு
பிரிவில் பணிபுரிந்த தலைமைக்காவலர் திரு.S.மகராஜன், (த.கா.43419) என்பவர்
சிந்தாதிரிப்பேட்டை காவலர் குடியிருப்பில் வசித்து வந்தார். மகராஜனுக்கு கடந்த
12.04.2021 அன்று கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது சோதனையில்
தெரியவந்ததின்பேரில் அவர் ஓமந்தூரார் பல்நோக்கு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு
சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனளிக்காமல் தலைமைக் காவலர்
S.மகராஜன் கடந்த 24.4.2021 அதிகாலை இறந்தார். இவருக்கு அமுதா , பெ/வ.35
என்ற மனைவியும், சுபஶ்ரீ, வ/13, நந்தன் ஶ்ரீ வ/9 ஆகிய இரு மகள்களும் உள்ளனர்.
இன்று (26.04.2021) காலை K-4 அண்ணாநகர் காவல் நிலைய வளாகத்தில்
நடைபெற்ற இறந்த தலைமைக் காவலருக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியில் சென்னை
பெருநகர காவல் ஆணையாளர் திரு.மகேஷ்குமார் அகர்வால் ,இ.கா.ப., அவர்கள்
மறைந்த தலைமைக் காவலர் S.மகராஜன் அவர்களின் திருவுருவ படத்திற்கு மலர் தூவி
அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து சென்னை பெருநகர காவல் அதிகாரிகள் மற்றும்
காவல் ஆளிநர்கள் மலரஞ்சலி செலுத்தினர். பின்னர் காவல் அதிகாரிகள் மற்றும்
ஆளிநர்கள் அனைவரும் 2 நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தினர்.
இந்நிகழ்வில், சென்னை பெருநகர காவல் கூடுதல் ஆணையாளர்கள்
திரு.T.செந்தில்குமார், இ.கா.ப, (வடக்கு), திருமதி.K.பவானீஸ்வரி, இ.கா.ப
(போக்குவரத்து) இணை ஆணையாளர்கள் திருமதி.S.ராஜேஸ்வரி, இ.கா.ப (மேற்கு),
திரு.K.எழிலரசன், இ.கா.ப, (போக்குவரத்து வடக்கு) துணை ஆணையாளர்கள்
திரு.G.ஜவஹர், இ.கா.ப, (அண்ணாநகர்), டாக்டர்.தீபா சத்யன், இ.கா.ப (போக்குவரத்து
தெற்கு)திரு.M.M.அசோக்குமார் (போக்குவரத்து மேற்கு) காவல் அதிகாரிகள் மற்றும்
ஆளிநர்கள் கலந்து கொண்டனர்.

******

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *