அதிமுக ரெட்டியார்சத்திரம் கிழக்கு ஒன்றியம் சார்பில் புதுச்சத்திரத்தில் கோடை கால நீர் மோர் பந்தல் திறப்பு

Loading

ஒட்டன்சத்திரம் ஏப்:-
திண்டுக்கல் கிழக்கு மாவட்டம், ரெட்டியார்சத்திரம் கிழக்கு ஒன்றிய அதிமுக சார்பில் பொதுமக்களுக்கு கோடை கால வெப்பத்தை தணிக்க புதுச்சத்திரத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது.
இவ்விழாவிற்கு ரெட்டியார்சத்திரம் கிழக்கு ஒன்றிய செயலாளர் ஆர்.கே.சுப்பிரமணி முன்னிலை வைகித்தார். இவ்விழாவில் மாவட்ட துணைச் செயலாளர் விஜயபாலமுருகன், பேரவை ஒன்றிய செயலாளர் மயில்வாகனன், ஒன்றிய அவைத்தலைவர் ஆர்.வெங்கடாசலம், ஆத்தூர் ஒன்றிய செயலாளர் மயில்சாமி, கன்னிவாடி பேரூர்செயலாளர் முருகன், முன்னாள் கவுன்சிலர் நீலமலைக்கோட்டை பழனிச்சாமி, எம்.ஜி.ஆர். மன்ற தலைவர் கே.சிவக்குமார் மாவட்ட பிரதிநிதி கந்தசாமி, எம்.ஜி.ஆர்.மன்ற செயலாளர் ஆசைத்தம்பி, கிளைச்செயலாளர்கள் தங்கராஜ், அண்ணாநகர் முருகன், பிரதிநிதி சாமிராஜ், உள்ளிட்ட மாவட்ட ஒன்றிய நகர சார்பு அணி நிர்வாகிகள், முன்னாள், இன்னாள் உள்ளாட்சி பிரதிநிதிகள் உட்பட திரளானோர் பங்கேற்றனர்.
முன்னதாக மிளகாய், தயிர், மல்லி, கருவேப்பிளை, இஞ்சி, வெங்காயம், எலுமிச்சை, உள்ளிட்டவைகள் அடங்கிய நீர்மோர் தினந்தோறும் பொதுமக்கள், பயணிகள் சுமார் 1000-க்கும்; மேற்பட்டோருக்கு வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *