மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மனு கொடுக்க வருவோர் அமரும் இடத்தில் (Digital Signage Board) யை நிறுவி அதில் பல்வேறு விழிப்புணர்வு
கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வெ.பத்ரிநாராயணன் IPS அவர்கள் பொதுமக்களுக்கு பாதுகாப்புக்காகவும் , அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாகவும் மாவட்டத்தில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அதன் ஒரு பகுதியாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மனு கொடுக்க வருவோர் அமரும் இடத்தில் (Digital Signage Board) யை நிறுவி அதில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது. கொரோனா பற்றியும், முகக்கவசம் அணிவதில் அவசியம் குறித்தும், ஆன்லைன் OTP, சாலை பாதுகாப்பு போன்ற பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் இதில் ஒளிபரப்பு செய்யப்படும் . இதனை நேற்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வெ.பத்ரிநாராயணன் IPS அவர்கள் பொதுமக்களின் உபயோகத்திற்காக திறந்து வைத்தார். மேலும் இந்த Digital Signage Board – ல் வரும் நிகழ்ச்சிகள் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி சமுதாயத்தில் நடக்கும் பல்வேறு மோசடிகளிலிருந்து தங்களை தற்காத்து கொள்ள பயனுள்ளதாய் இருக்கும் என்று அவர் தெரிவித்தார்.