மாரண்டஅள்ளி அருகே காளிகான் கொட்டாய் சேர்ந்த மோகன் ஏரியில் குளிக்கும் போது சேரில் முழுங்கி உயிரிழப்பு
தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அருகே காளிகான்கொட்டாய் கிராமத்தைச் சேர்ந்த மோகன் 47 வயது மனைவி சைலஜா இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளது. மோகன் இன்று மதியம் கோடை வெயில் தாக்கத்தினால் குளிப்பதற்கு குமாரசெட்டி ஏரிக்கு சென்றுள்ளார். மோகன் ஏரியில் குளித்துக் கொண்டிருக்கும் போது எதிர்பாராத விதமாக சேர் உள்ள பகுதிக்கு சென்றதால் மோகன் சேரில் முழுங்கி மேலே வர முடியாமல் தத்தளித்து பரிதாபமாக உயிரிழந்தார். தகவலறிந்து மாரண்டஅள்ளி காவல்துறை மற்றும் பாலக்கோடு தீயணைப்புத்துறை பொதுமக்கள் உதவியோடு சேற்றில் முழுங்கிய மோகனை தரைக்கு மேலே மீட்டெடுத்து பிரேத பரிசோதனைக்காக பாலக்காடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தனர்.