கெங்கவல்லி தொகுதியில் தி.மு.க வேட்பாளர் தம்மம்பட்டி தனி வருவாய் பிர்கா அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் உறுதி.

Loading

சேலம் மாவட்டம் கெங்கவல்லி தொகுதியில் தி.மு.க வேட்பாளர் ரேகா பிரியதர்ஷினி தம்மம்பட்டியில் ,காந்திநகர் , கோனேரிப்பட்டி ஆகிய ஊராட்சிகளில் உதயசூரியன் சின்னத்திற்கு ஓட்டு கேட்டு பிரச்சாரம் செய்தனர்.
இந்த தொகுதியில் கெங்கவல்லி , தலைவாசல் என இரு தாலுக்கா உள்ளனர் . கெங்கவல்லி பச்சமலை என இரு வருவாய் பிர்கா மட்டும் உள்ளது .ஆனால் தம்மம்பட்டி தலைமையிடமாக வைத்து . தனி வருவாய் பிர்கா அமைக்கப்படும்.
தம்மம்பட்டி மரச்சிற்பத்துக்கு, புவிசார் குறியீடு, இந்த தொழில் வளர்ச்சிக்கு பல்வேறு திட்டப் பணிகள் மேற்கொள்ளப்படும் தம்மம்பட்டியில் அரசு மகளிர் கல்லூரி அமைக்கப்படும் . வலசக்கல்பட்டி ஏரியில் சுற்றுலா திட்டப் பணி மேற்கொள்ளப்படும் சுவேத நதியை தூய்மைப்படுத்துதல் ,சேரடி அணைத்திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை கொண்டு தொகுதியில் முன்மாதிரியாக மாற்றப்படும் என்று கூறினார்.
இதில் தொகுதி பொறுப்பாளர் கோபால் கெங்கவல்லி ஒன்றிய பொறுப்பாளர் அகிலன் பேரூர் பொறுப்பாளர் ராஜா முன்னாள் பொறுப்பாளர் சண்முகம் கூட்டணி கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் ஆகியோர் தேர்தல் பிரச்சாரத்தில் பங்கேற்றனர்.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *