100 சதவீதம் வாக்களிப்பதை வலியுறுத்தி இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் சார்பாக விழிப்புணர்வு..
52 total views , 1 views today
திருச்சிராப்பள்ளி மாவட்டம் 2021 சட்டமன்ற பொதுத் தேர்தல் ஏப்ரல் 6ஆம்
தேதி நடைபெறவுள்ளதை முன்னிட்டு வாக்காளர்கள் 100 சதவீதம்
வாக்களிப்பதை வலியுறுத்தி இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் சார்பாக
விழிப்புணர்வு பிரசுரங்கள் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும்
மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சு.சிவராசு அவர்கள்
வாக்காளர்களுக்கு வழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வெளியிட்டார்.
அருகில் வருவாய் கோட்டாட்சியர் திரு.விஸ்வநாதன், மாவட்ட
முன்னோடி வங்கியான இந்தியன் ஓவர்சீஸ் வங்கி முதுநிலை மண்டல
மேலாளர் திரு.கே. வேலாயுதம், உதவி பொது மேலாளர் திரு.கங்காதரன்,
மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் திரு.க.சத்தியநாராயணன், நபார்டூவங்கி
மாவட்ட மேலாளர் என்.எம்.மோகன் கார்த்திக் மற்றும் பலர் உடன் உள்ளனர்.