ஒலி பெருக்கிகள்/ செல்போன்கள் அதிகளவில் பறிமுதல்: ஜிஎஸ்டி மற்றும் மத்திய கலால் வரித்துறை அதிகாரிகள் நடவடிக்கை

Loading

சென்னை அண்ணா சாலை பகுதியில், விலைப்பட்டியல் இல்லாமல் கொண்டு வரப்பட்ட கூம்பு வடிவ ஒலி பெருக்கிகள், கார் ஸ்பீக்கர்கள் மற்றும் செல்போன்களை ஜிஎஸ்டி மற்றும் மத்திய கலால் வரித்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

சென்னையில் உள்ள ஜிஎஸ்டி மற்றும் மத்திய கலால் வரித்துறை அதிகாரிகள் 24 மணி நேரக் கட்டுப்பாட்டு அறை அமைத்து, தேர்தல் முறைகேடுகளை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

சென்னை அண்ணா சாலை பகுதியில் சோதனையில் ஈடுபட்ட கள அதிகாரிகள், விலைப் பட்டியல் இல்லாமல் கொண்டுவரப்பட்ட கூம்பு வடிவ ஒலிபெருக்கிகள், கார் ஸ்பீக்கர்கள் மற்றும் பிரபல நிறுவனங்களின் செல்போன்களை பறிமுதல் செய்தனர்.

இவற்றின் மதிப்பு ரூ.25 லட்சம் முதல் ரூ.30 லட்சம் வரை இருக்கும் எனவும், இது தொடர்பாக மேலும் விசாரணை நடந்து வருவதாக, வட சென்னை ஜிஎஸ்டி மற்றும் மத்திய கலால் வரித்துறை மக்கள் தொடர்பு அதிகாரி திரு என்.ஆர். ராஜ்குமார் வெளியிட்ட செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

0Shares

Leave a Reply