திருவள்ளூரில் வாக்களிப்பதன் அவசியத்தை வலியுறுத்தி குடிநீர் கேன்களில் வாக்காளர் விழிப்புணர்வு ஒட்டு வில்லைகள் : மாவட்ட தேர்தல் அலுவலர் துவக்கி வைத்தார் :
இந்திய தேர்தல் ஆணையத்தின் ஆணைக்கிணங்க தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தலை முன்னிட்டு, 100 சதவிகித வாக்குப்பதிவு உறுதி செய்யும் விதமாக பொதுமக்களிடையே பல்வேறு விழி;ப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.
அதன்படி திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில், வாக்காளர்களிடையே வாக்களிப்பதன் அவசியத்தை வலியுறுத்தி வாக்காளர் விழிப்புணர்வு ஒட்டு வில்லைகளை மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான பா.பொன்னையா குடிநீர் கேன்களில் ஒட்டி, அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் கேன்களை விநியோகித்து, விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணிகளை துவக்கி வைத்தார்.
அதனைத் தொடர்ந்து, ஜே.என்.சாலையில் உள்ள தனியார் உணவக விடுதியில் வாக்காளர்களிடையே வாக்களிப்பதன் அவசியத்தை வலியுறுத்தி வாக்காளர் விழிப்புணர்வு ஒட்டு வில்லைகளை உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் ஜெகதீஷ் சந்திரபோஸ் மற்றும் செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் முகமது ரசூல் ஆகியோர் உணவகத்தில் ஒட்டி, வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் பணம் பற்றுக்கான இரசீதுகளிலும் வாக்குப்பதிவு நாள் அச்சிடப்பட்டு வாடிக்கையாளர்களிடம் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
மேலும் உணவு பாதுகாப்புத்துறை வாயிலாக சாலையோர வியாபாரிகளுக்கு வண்ண சீருடைகள் வாயிலாகவும், உரிமம் பாதுகாப்பு உரிமம் காகிதங்களிலும் தேர்தல் விழிப்புணர்வு மற்றும் பால் விநியோகிக்கும் உரைகளிலும் தேர்தல் தேதி அச்சிடப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.இந்நிகழ்ச்சியில் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.