காங்கிரஸ் கட்சியிலிருந்து 170 எம்.எல்.ஏ.,க்கள் ஓட்டம்

Loading

காங்கிரசிலிருந்து, கடந்த ஐந்து ஆண்டுகளில் மட்டும், 170 எம்.எல்.ஏ.,க்கள் விலகி, வேறு கட்சிகளில் சேர்ந்து உள்ளனர்’ என்ற தகவல் வெளியாகி உள்ளது.ஏ.டி.ஆர்., எனப்படும், ஜனநாயக சீர்திருத்தத்துக்கான சங்கம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: கடந்த, 2016 – 20ம் ஆண்டுகளில், காங்கிரசைச் சேர்ந்த ஏழு ராஜ்யசபா எம்.பி.,க்கள், அக்கட்சியிலிருந்து விலகி, வேறு கட்சிகளில் சேர்ந்து, தேர்தலில் போட்டியிட்டனர். எம்.எல்.ஏ.,க்கள் விலகலில் பெரிதும் பாதிக்கப்பட்டது காங்கிரஸ் தான். 2016 – 20ம் ஆண்டுகளில் மட்டும், காங்கிரசிலிருந்து, 170 எம்.எல்.ஏ.,க்கள் விலகி, வேறு கட்சிகளில் இணைந்துஉள்ளனர்.ஆனால், இதே காலத்தில், பா.ஜ.,விலிருந்து, 18 எம்.எல்.ஏ.,க்கள் மட்டுமே விலகி, வேறு கட்சிகளில் சேர்ந்து, தேர்தலில் போட்டியிட்டுள்ளனர். மத்திய பிரதேசம், மணிப்பூர், கோவா, அருணாச்சல பிரதேசம், கர்நாடகா ஆகிய மாநிலங்களில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதற்கு, எம்.எல்.ஏ.,க் களின் கட்சி தாவல்கள் தான் காரணம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *