கன்னியாகுமரி பாராளுமன்ற இடைத்தேர்தலில் ஐக்கிய கிறிஸ்தவ முன்னேற்ற பேரவை தனித்து களம் காண போவதாக அறிவிப்பு..
கன்னியாகுமரி மாவட்ட ஐக்கிய கிறிஸ்தவ முன்னேற்ற பேரவை தேர்தல் குறித்து நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் நாகர்கோவிலில்நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கிறிஸ்தவ அமைப்பு பிரதிநிதிகள், பாஸ்டர்கள், உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர் இந்த கூட்டத்திற்கு பின்னர் தமிழ்நாடு ஐக்கிய கிறிஸ்தவ முன்னேற்ற சேனை தலைவர் தேவடாசன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த போது :- கன்னியாகுமரி மாவட்டத்தில் பட்டா நிலங்களில் ஆலயங்கள் கட்ட அனுமதி அளிக்கப்படும் என மறைந்த முதல்வர் ஜெயலலிதா அறிவித்திருந்தார் ஆனால் அதனை அதிமுக அரசு இதுவரை நிறைவேற்றவில்லை, இதேபோன்று கிறிஸ்தவர்களுக்கு பல்வேறு சலுகைகள் கோரி போராட்டங்கள் கடந்தும் இதுவரை எந்த சலுகை வழங்கப்படவில்லை. எனவே கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதி இடைத்தேர்தலில் திமுக கூட்டணிக் கட்சிகள் மற்றும் மதவாத கூட்டணி கட்சிகளுக்கு ஆதரவு அளிக்காமல் ஒட்டுமொத்த கிறிஸ்தவ அமைப்பு சார்பில் தேர்தலில் வேட்பாளரை நிறுத்த முடிவு செய்துள்ளதாக தெரிவித்தார்…