தேர்தல் பறக்கும் படை மற்றும் நிலையான கண்காணிப்பு குழு சார்ந்தவர்களுக்கு வருமான வரித்துறை அலுவலர்கள் வாயிலாக பயிற்சி அளிக்கப்பட்டது.
இந்திய தேர்தல் ஆணையத்தின் ஆணைக்கிணங்க, தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தலை முன்னிட்டு திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான பா.பொன்னையா தலைமையில் தேர்தல் பறக்கும் படை மற்றும் நிலையான கண்காணிப்பு குழு சார்ந்தவர்களுக்கு வருமான வரித்துறை அலுவலர்கள் வாயிலாக பயிற்சி அளிக்கப்பட்டது.இதில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (கணக்கு) விஸ்வநாதன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) ச.வித்யா மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.