திருவள்ளூரில் டாஸ்மார்க் தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் ஆர்ப்பாட்டம் :

Loading

திருவள்ளூர் ரயில் நிலையம் அருகே டாஸ்மார்க் தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் பல்வேறு கோரிக்கைகளை சட்டமன்ற கூட்டத்தொடரில் அறிவிக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். எல்.பி.எம் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். டாஸ்மாக் ஊழியர் சங்கத்தின் மாவட்ட தலைவர் கேசவன்,மாவட்ட செயலாளர் சந்திரன்,மாநில பொதுச்செயலாளர் தனசேகர், மாநில செயலாளர் மாரி ஆகியோர் முன்னிலை வகித்தனர்

ஆர்ப்பாட்டத்தில் டாஸ்மாக் கடைகளில் 18 ஆண்டுகாலமாக பணிபுரிந்து வரும் ஊழியர்களுக்கு பணி வரன்முறைபடுத்த வேண்டும், அரசு ஊழியருக்கு இணையான காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், பாதுகாப்பான பணி நிலைமையை ஏற்படுத்த வேண்டும், சுழற்சி முறையில் மாறுதல் செய்ய வேண்டும்,விற்பனை நேரம் குறைப்பு பாதுகாப்பற்ற கடைகளை மூட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் சட்டமன்ற கூட்டத்தொடரில் டாஸ்மாக் ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில் மாநில தலைவர் அண்ணாதுரை,விற்பனையாளர் சங்க தலைவர் கிருஷ்ணமூர்த்தி, எல்.பி.எப் ரஞ்சித் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.இறுதியாக சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் ராஜேந்திரன் நன்றி கூறினார்.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *