தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் தருமபுரி மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு (ம) தொழில்நெறி வழிகாட்டும் மையம் நடத்தும் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்
தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் தருமபுரி மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு (ம) தொழில்நெறி வழிகாட்டும் மையம் நடத்தும் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம், தருமபுரி அரசு கலைக் கல்லூரியில் 28.02.2021 அன்று நடத்துவது குறித்து முன்னேற்பாடு பணிகள் குறித்த
ஆலோசனைக்கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ச.ப.கார்த்திகா அவர்கள் தலைமையில் நடைபெற்றது.உடன் மாவட்ட வருவாய் அலுவலர் திரு.இராமயூர்த்தி,
தருமபுரி சார் ஆட்சியர் திரு.மு.பிரதாப்,மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திருமதி.க.ஆர்த்தி, முதன்மைக் கல்வி அலுவலர் திருமதி.ந.கீதா,
துணை இயக்குநர் (சுகாதாரப் பணிகள்) மரு.பூ.இரா.ஜெமினி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் திருமதி.செண்பகவள்ளி, வட்டார வளர்ச்சி அலுவலர்
திரு.சுருளிநாதன், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் செல்வி.ம.தீபா ஆகியோர் உள்ளனர்