பொங்கல்‌ பரிசு தொகுப்பு பெற்ற பெண்கள்‌ தமிழக அரசுக்கு நெஞ்சார்ந்த நன்றி.

Loading

பொங்கல்‌ பரிசு தொகுப்பு பெற்ற பெண்கள்‌ தமிழக அரசுக்கு நெஞ்சார்ந்த நன்றி.

பெண்களின்‌ முன்னேற்றமே சமுதாயத்தின்‌ முன்னேற்றம்‌ என்பதை கருத்தில்‌
கொண்டு தமிழக அரசால்‌ பெண்களுக்கான பல்வேறு திட்டங்கள்‌ அறிவிக்கப்பட்டு
சிறப்பான முறையில்‌ செயல்படுத்தப்பட்டு வருகிறது. பெண்களின்‌ பாதுகாப்பையும்‌,
வாழ்வாதாரத்தையும்‌, மேம்படுத்தும்‌ வகையில்‌ மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்‌
அவர்களால்‌ பல்வேறு திட்டங்கள்‌ செயல்படுத்தப்பட்டு வருகிறார்‌.

தமிழர்‌ திருநாளாம்‌ தைப்‌ பொங்கல்‌ திருநாளையொட்டி அனைத்து அரிசி
குடும்ப அட்டை தாரர்களின்‌ குடும்பங்கள்‌ பயன்பெறும்‌ வகையில்‌ தலா ரூ.2500
ரூபாய்‌ ரொக்கத்துடன்‌, ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, 20 கிராம்‌
முந்திரி, 20 கிராம்‌ உலர்ந்த திராட்சை, 5 கிராம்‌ ஏலக்காய்‌ மற்றும்‌ ஒரு முழு நீள
கரும்பு ஆகியவை அடங்கிய சிறப்பு பொங்கல்‌ பரிசுத்‌ தொகுப்பு வழங்கும்‌ திட்டம்‌
மற்றும்‌ 1 கோடியே 80 லட்சம்‌ விலையில்லா வேட்டி, சேலை வழங்கும்‌
திட்டத்தினை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்‌ அவர்கள்‌ 21.12.2020 அன்று
துவக்கி வைத்தார்கள்‌.

தமிழர்களின்‌ திருநாளாம்‌ தைப்‌ பொங்கலை சிறப்பாகக்‌ கொண்டாட வேண்டும்‌
என்பதற்காக ஓவ்வொரு ஆண்டும்‌ தமிழ்நாடு அரசு பொங்கல்‌ பரிசு அறிவித்து
வழங்கி வருகிறது. இந்த ஆண்டை பொறுத்தவரை, கொரோனா வைரஸ்‌ தொற்று
பரவல்‌ ஏற்பட்டு பலருக்கு வேலைவாய்ப்பு இல்லாத சூழ்நிலை, டெல்டா
பகுதிகளிலே புயலினால்‌ கடுமையான மழை, அங்கே தொழிலாளர்கள்‌ கடுமையாக
பாதிக்கப்பட்டுள்ளார்கள்‌. ஓட்டுமொத்தமாக தமிழ்நாடு முழுவதும்‌ கொரோனாவால்‌
வேலை இழந்திருக்கின்ற சூழ்நிலை, புயலால்‌, கன மழையால்‌ தொழிலாளர்கள்‌
வேலை இழந்திருக்கின்ற சூழ்நிலை ஆகிய இரண்டும்‌ இந்த ஆண்டை
பாதித்திருக்கிறது.

இதையெல்லாம்‌ அரசு கருத்தில்‌ கொண்டு தைப்‌ பொங்கலை தமிழ்நாட்டில்‌
இருக்கின்ற அத்தனை தமிழர்களும்‌ சிறப்பாக கொண்டாட வேண்டும்‌ என்பதற்காக
தமிழகத்தில்‌ உள்ள 2 கோடியே 6 லட்சம்‌ அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு
ஓவ்வொரு குடும்ப அட்டைக்கும்‌ ரூபாய்‌ 2500/- மற்றும்‌ ஒரு கிலோ பச்சரிசி, ஒரு
கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்பு, 20 கிராம்‌ உலர்‌ திராட்சை, 20 கிராம்‌
முந்திரி, 5 கிராம்‌ ஏலக்காய்‌, ஒரு நல்ல துணிப்பை ஆகியவை கொடுக்கப்படும்‌
என்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்‌ அவர்கள்‌ துவக்கி வைத்தார்‌.
இத்திட்டதிற்காக தமிழ்நாடு அரசு ரூபாய்‌ 5,604.84 கோடி நிதி ஒதுக்கீடு
செயயப்பட்டுள்ளது.

கைத்தறி நெசவாளர்களுக்கு ஆண்டு முழுவதும்‌ வேலைவாய்ப்பு
வழங்குவதற்காகவும்‌, அதன்மூலம்‌ அவர்களின்‌ வாழ்க்கைத்‌ தரத்தை உயர்த்திடவும்‌,
1983-ஆம்‌ ஆண்டு அப்போதைய முதலமைச்சர்‌ மாண்புமிகு புரட்சித்‌ தலைவர்‌
டாக்டர்‌ எம்‌.ஜி.ஆர்‌ அவர்களால்‌ இலவச வேட்டி, சேலை வழங்கும்‌ திட்டம்‌
தொடங்கப்பட்டது. இதன்படி, ஒவ்வொரு ஆண்டும்‌ தமிழர்‌ திருநாளான பொங்கல்‌
திருநாளையொட்டி விலையில்லா வேட்டிகள்‌ மற்றும்‌ சேலைகள்‌ வழங்கப்பட்டு
வருகின்றன. இத்திட்டத்தின்‌ மூலம்‌ ஏழை, எளிய மக்கள்‌ பயன்பெறுவதோடு
மட்டுமல்லாமல்‌, கைத்தறி விசைத்தறி தொழில்களில்‌ ஈடுபட்டுள்ளோருக்கும்‌
வேலைவாய்ப்பு வழங்கப்படுகிறது. அந்த வகையில்‌, 2021-ஆம்‌ ஆண்டு 484
கோடியே 25 லட்சம்‌ ரூபாய்‌ செலவில்‌ 1 கோடியே 80 லட்சம்‌ வேட்டிகள்‌ மற்றும்‌
சேலைகள்‌ வழங்கிடும்‌ திட்டத்தையும்‌ மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்‌
அவர்கள்‌ 21.12.2020 அன்று துவக்கி வைத்தார்கள்‌.

அதன்படி திண்டுக்கல்‌ மாவட்டத்திற்கு 6,40,035 குடும்ப அட்டைதாரா்களுக்கு
ரூ.160 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. திண்டுக்கல்‌ மாவட்டத்தில்‌
நியாயவிலைக்‌ கடைகள்‌ மூலம்‌ மொத்தம்‌ 6,40,035 அரிசி குடும்ப
அட்டைதாரர்களுக்கு பொங்கல்‌ பரிசுத்‌ தொகுப்பு விநியோகிக்க குடும்ப
அட்டைதாராகளுக்கு டோக்கன்‌ வழங்கப்பட்டு, முற்பகல்‌ 100 குடும்ப
அட்டைதாரர்களுக்கும்‌, பிற்பகல்‌ 100 குடும்ப அட்டைதாராகளுக்கு தலா ரூ.2,500/-
மற்றும்‌ பொங்கல்‌ பரிசு தொகுப்பு வழங்கப்பட்டது.

பொங்கல்‌ பரிசு தொகுப்பு பெற்ற செட்டநாயக்கன்பட்டியை சேர்ந்த திருமதி
வள்ளியம்மாள்‌ அவர்கள்‌ தெரிவித்ததாவது:

நான்‌ திண்டுக்கல்‌ மாவட்டம்‌, செட்டிநாயக்கன்பட்டியில்‌ வசித்து வருகிறேன்‌.
எனது கணவர்‌ கூலி வேலை செய்து வருகிறார்‌. எனக்கு ஒரு மகன்‌ உள்ளான்‌.
எனது மகன்‌ 10-ம்‌ வகுப்பு படித்து வருகிறான்‌. ஏழை மற்றும்‌ நடுத்தர மக்கள்‌ இந்த
வருடம்‌ கொரோனா பாதிப்பால்‌ மிகுந்த சிரமத்துக்கு ஆளாகி வந்தனர்‌. ஊரடங்கு
தளர்த்தப்பட்ட பிறகும்‌ இன்னும்‌ பலர்‌ இயல்பு நிலைக்கு திரும்ப முடியாத நிலை
உள்ளது. இது போன்ற சூழலில்‌ தமிழக அரசு அறிவித்துள்ள பொங்கல்‌ பரிசு
தொகுப்பு பலதரப்பட்ட மக்கள்‌ மனதில்‌ பால்‌ வளர்ப்பது போல உள்ளது.
திண்டுக்கல்‌ மாவட்டத்தில்‌ உள்ள அனைத்து ரேசன்‌ கடைகளிலும்‌ நாள்‌ ஒன்றுக்கு
100 பேருக்கு பொங்கல்‌ பரிசு தொகுப்பு பொருட்கள்‌ வழங்கப்படும்‌ என
அறிவிக்கப்பட்டு, கடைகளுக்கு வருபவர்கள்‌ அனைவரும்‌ முககவசம்‌ அணிந்து வர
வேண்டும்‌ என அறிவுறுத்தப்பட்டு இருந்தது. அதன்படி அவர்களுக்கு முன்கூட்டியே
டோக்கன்‌ வழங்கப்பட்டு. டோக்கன்‌ வினியோகம்‌ செய்யப்பட்ட அடிப்படையில்‌ ரேசன்
கடைகளில்‌ ரேசன்‌ அட்டைக்கு தலா ரூ.2500/- ரொக்கத்துடன்‌, ஒரு கிலோ பச்சரிசி,
ஒரு கிலோ சர்க்கரை, 20 கிராம்‌ முந்திரி, 20 கிராம்‌ உலர்ந்த திராட்சை, 5 கிராம்‌
ஏலக்காய்‌ மற்றும்‌ ஒரு முழு நீள கரும்பு ஆகியவை அடங்கிய தொகுப்புவை
பெற்றுக்கொண்டேன்‌. எங்களைப்போல்‌ ஏழை, எளிய மக்களின்‌ நலனை கருத்தில்‌
கொண்டு பொங்கல்‌ பரிசு தொகுப்பு வழங்கும்‌ திட்டத்தை தொடங்கி வைத்த
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சரா அவர்களுக்கு எனது குடும்பத்தின்‌ சார்பாக
நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன்‌. இவ்வாறு பொங்கல்‌ பரிசு
தொகுப்பு பயன்பெற்ற செட்டிநாயக்கன்பட்டியை சோந்த திருமதி வள்ளியம்மாள்‌
அவர்கள்‌ தெரிவித்தார்‌.

பொங்கல்‌ பரிசு தொகுப்பு பெற்ற திண்டுக்கல்‌ கிழக்கு வட்டம்‌ சிலுவத்தூரை
சோந்த திருமதி ரேவதி அவர்கள்‌ தெரிவித்ததாவது:

நான்‌ திண்டுக்கல்‌ மாவட்டம்‌ கிழக்கு வட்டம்‌ சிலுவத்தூரில்‌ வசித்து
வருகிறேன்‌. நான்‌ விவசாய கூலி வேலைக்கு சென்று வருகிறேன்‌. என குடும்பம்‌
மிகவும்‌ ஏழ்மையான குடும்பம்‌ ஆகும்‌. எனது கணவர்‌ விவசாய வேலைக்கு சென்று
வருகிறார்‌.எங்களை போன்ற ஏழை, எளிய குடும்பங்களில்‌ பொங்கல்‌ திருவிழா
கொண்டாடுவது என்பது மிகவும்‌ கஷ்டமாக இருந்து வந்ததது. தை திருநாளான
பொங்கல்‌ திருநாளினை சிறப்பாக கொண்டாட மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்‌
அவர்கள்‌ ஒரு சிறப்பான திட்டத்தினை அறிவித்துள்ளார்‌. எங்கள்‌ பகுதியில்‌ உள்ள
அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல்‌ சிறப்பு தொகுப்பு தலா
ரூ.2500 ரூபாய்‌ ரொக்கத்துடன்‌, ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, 20
கிராம்‌ முந்திரி, 20 கிராம்‌ உலர்ந்த திராட்சை, 5 கிராம்‌ ஏலக்காய்‌ மற்றும்‌ ஒரு
முழு நீள கரும்பு ஆகியவை வழங்கியது எங்கள்‌ குடும்பத்தில்‌ பொங்கல்‌ திருவிழா
சிறப்பாக கொண்டாட மிகவும்‌ பயனள்ளதாக அமைந்துள்ளது. இத்திட்டத்தை
தொடங்கி வைத்த மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு எனது
குடும்பத்தின்‌ சார்பாக நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன்‌. இவ்வாறு
பொங்கல்‌ பரிசு தொகுப்பு பபன்பெற்ற திண்டுக்கல்‌ கிழக்கு வட்டம்‌ சிலுவத்தூரை
சோந்த திருமதி ரேவதி அவர்கள்‌ தெரிவித்தார்‌.

வெளியீடு
செய்தி மக்கள்‌ தொடர்பு அலுவலர்‌,
திண்டுக்கல்‌ மாவட்டம்‌.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *