சேலம் மாவட்டம், ஆத்தூர், விநாயகபுரத்தில் ஊன்றுகோல் அறக்கட்டளையின் சார்பில், மாற்றுத்திறனாளிகள் சங்கமம் நடைபெற்றது.

Loading

சேலம் மாவட்டம், ஆத்தூர், விநாயகபுரத்தில் ஊன்றுகோல் அறக்கட்டளையின் சார்பில், மாற்றுத்திறனாளிகள் சங்கமம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு அறக்கட்டளையின் மாநிலத் தலைவர் ஜெ.கருணாகரன் அவர்களின் வழிகாட்டுதலின் படி, ஊன்றுகோல் அறக்கட்டளையின் சார்பில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. கொரோனா நோய்தொற்று கடந்த ஆண்டு உலகெங்கும் பரவிய நிலையில் பொதுமக்கள் ஏராளமானோர்க்கு வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது. குறிப்பாக மாற்றுத்திறனாளிகள் பொருளாதார ரீதியில் வெகுவாக பாதிக்கப்பட்டனர். அவர்களின் வாழ்வாதாரத்தை காக்கும் விதத்தில் ஊன்றுகோல் அறக்கட்டளையின் சார்பில் கடந்த 6 ஆண்டுகளுக்கும் மேலாக பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக ஆத்தூர் விநாயகபுரத்தில் மாற்றுதிறனாளிகளுக்கு அரிசி பருப்பு உள்ளிட்ட மளிகைப் பொருட்களை ஊன்றுகோல் அறக்கட்டளையினர் வழங்கினர். இதில் ஊன்றுகோல் அறக்கட்டளையின் மாவட்ட தலைவர் வரதராஜ், மாவட்ட பொறுப்பாளர் முருகன் ஆகியோர் தலைமை வகிக்க, சிறப்பு அழைப்பாளர்களாக தமிழக நாயுடு பேரவையின் கண்ணன், சத்திய நாராயணன், இரா. கண்ணன் நாயுடு, சின்னதுரை, மணிவேல், கார்த்திக், செந்தில், பிரபாகரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *