கள்ளக்குறிச்சி மாவட்டம் காவல் கண்காணிப்பாளர் திரு.ஜியாவுல்ஹக் அவர்கள் உத்தரவுப்படி கள்ளக்குறிச்சி உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் திரு.இராமநாதன் அவர்கள் தலைமையில் பொற்படாகுறிச்சி கிராமத்தில் கிராம விழிப்புணர்வு…

Loading

கள்ளக்குறிச்சி மாவட்டம் காவல் கண்காணிப்பாளர் திரு.ஜியாவுல்ஹக் அவர்கள் உத்தரவுப்படி கள்ளக்குறிச்சி உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் திரு.இராமநாதன் அவர்கள் தலைமையில் பொற்படாகுறிச்சி கிராமத்தில் கிராம விழிப்புணர்வு காவல் அலுவலர் திரு.பாலாஜி என்பவரை (V.V.P.O) பொதுமக்களிடையே அறிமுகப்படுத்தினார். இந்நிகழ்ச்சியில் பேசும் போது ஒவ்வொரு கிராமத்திற்கும் ஒரு போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர். அவரது மொபைல் எண் எல்லோருக்கும் தெரியும்படி விளம்பரம் செய்துள்ளோம். கிராமங்களில் சட்டம் ஒழுங்கை கண்காணிக்கவும், திருட்டு நடக்காமல் தடுக்கவும் கிராம விழிப்புணர்வு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அடிக்கடி கிராமங்களுக்கு வந்து பொதுமக்களை சந்தித்து பேசுவர். அவர்களிடம் பொதுமக்கள் தங்கள் கிராமத்தின் சட்டம் ஒழுங்கு தொடர்பான தகவல்களை தெரிவிக்கலாம். இதன் மூலம் குற்றங்கள் தடுக்கப்படும். மேலும் காவலர்கள் மற்றும் பொதுமக்களிடையே எளிய அணுக முறை இருக்கும் என்று கூறினார்.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *