கோயில் திருப்பணியை அனிபால் கென்னடி ஆய்வு

Loading

புதுச்சேரி அக்-31
புதுச்சேரி உப்பளம் எல்லையம்மன் கோயில் திருப்பணியை ஆய்வு செய்த அனிபால் கென்னடி எம்எல்ஏ 
புதுச்சேரி உப்பளம் தொகுதியில் உள்ள அருள்மிகு ஸ்ரீ எல்லை அம்மன் கோயிலில் நடைபெற்று வரும் திருப்பணிகள் தொடர்பாக திமுக உப்பளம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அனிபால் கென்னடி அவர்கள் அறநிலைய துறை ஆணையர் கந்தசாமி அவர்களை நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
அருள்மிகு ஸ்ரீ எல்லை அம்மன் கோயில் திருப்பணிக்காக நிதி உதவி வழங்குவதற்கான தேவையான ஆவணங்கள் விரைந்து செய்யப்பட வேண்டும் என சட்டமன்ற உறுப்பினர் ஆணையரிடம் கேட்டுக்கொண்டார். இதற்கு ஆணையர் கந்தசாமி அவர்கள், “தேவையான நடவடிக்கைகள் உடனடியாக மேற்கொள்ளப்படும்” என்று உறுதி அளித்தார்.
இதனைத் தொடர்ந்து, சட்டமன்ற உறுப்பினர் அனிபால் கென்னடி அவர்கள் கோவில் நிர்வாக அதிகாரிகளுடன் இணைந்து நேரில் கோவிலை பார்வையிட்டு, திருப்பணிகள் குறித்து ஆய்வு செய்தார். பணிகளை விரைவில் நிறைவு செய்யுமாறு அவர் நிர்வாக அதிகாரிகளை வலியுறுத்தினார்.
இந்நிகழ்வில் நிர்வாக அதிகாரி காமராஜ், திமுக கிளை செயலாளர் ராகேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
0Shares