லாரி மோதி இருசக்கர வாகனத்தில் வந்த பெண் உடல் நசுங்கி பலி

Loading

திருவள்ளூரை அடுத்த அரண்வாயல் அன்னை தெரசா நகர் பகுதியைச் சேர்ந்த  தனசேகர் என்கிற என்சன் என்பவரது மனைவி சாமுண்டீஸ்வரி.  இவர் தனது டிஎன் 20 சிஜி 6188 என்ற இரு சக்கர வாகனத்தில் கொசவன்பாளையம் கிராமத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்று திரும்பி வந்து கொண்டிருந்தார்.
அப்போது திருப்பாச்சூர் என்ற இடத்தில் வந்து கொண்டிருந்த போது திடீரென நிலைதடுமாறி கீழே விழுந்துள்ளார். அப்போது மண் ஏற்றிக் கொண்டு வந்த டிஎன் 73 என் 5181 என்ற லாரி சாமுண்டீஸ்வரி மீது ஏறி இறங்கியது.
இதில் சாமுண்டீஸ்வரி  சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி, துண்டு துண்டாகி பலியானார். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திருவள்ளூர் தாலுகா போலீசார் சாமுண்டீஸ்வரி உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இருசக்கர வாகனத்தில் செல்லும் போது நிலை தடுமாறி கீழே விழுந்த போது பின்னால் வந்த லாரி ஏறி இறங்கியதில் பெண் உடல் நசுங்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *